Sunday, January 23, 2011

சபரிமலை துயரம்


கடவுளின் பெயரை கொண்டு காசு பார்க்கும் கோர செயல் நம்நாட்டில் அன்றாட வாடிக்கையாயிற்று.இதற்கு சரியான உதாரணம் "சபரிமலை துயரம்".நம்மை  இச்சம்பவம் ,நம் நாட்டு மக்கள் சிலரினால் ஏற்பட்ட "சுயநல கொலைளே...! "என தலைகுனிய வைக்கின்றன.இவ்வுலகில் மனித உயிர்களுக்கு ஈடுஇணை கடவுள்கூட இல்லை எனும் போது ,மனிதன் படைத்த காசுக்காக நம்மில் சிலர் கடவுளின் துணைகொண்டு மனித உயிர்களையே பனையமாக வைக்கின்றனர். இதற்கு பெயர்தான் பக்தியா...? உயிரிலந்தவர்களின் உடல்களை கழிவுகள் ஏற்றும் வண்டியில் ஏற்றி சென்றது,நம் நாட்டில் மனிதாபிமானத்தின் நிலையை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
மனிதற்களையே மதிக்காத இந்த அரசும் அதிகாரிகளும்,நீதி விசாரணைகளுக்கா பயப்பட போகின்றனர்...?மகத்தான நம் மானிட சமுத்திரத்தில் இதுபோன்றிருக்கும் சில விச பாறைகளை அந்த கடவுள் நிச்சயம் மனிக்கமாட்டார்...

0 comments:

Post a Comment